வியாழன், 5 மார்ச், 2020

திருக்குறள்

அதிகாரம் 1 / Chapter 1 – கடவுள் வாழ்த்து



குறள் 2:
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

மு.வ விளக்கம்:
 தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?

சாலமன் பாப்பையா விளக்கம்:
 தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?

கலைஞர் விளக்கம்:
 தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.


நன்றி,/Thank you,
dheivegam.com

திருக்குறள்

குறள் 4: வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல மு.வ விளக்கம்: விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி ...